Tuesday, January 29, 2008

தமிழ் திரை மலரும் நினைவுகள் - தொகுதி 2


செல்லுலாயிட் ஊடகம் என்னும் சினிமாத் துறை அது தொடங்கிய காலத்திலிருந்து படிப்படியாகப் வளர்ந்து இன்றைக்கு டிஜிட்டல் சினிமாவாக பரிணமித்துள்ளது.

சினிமா என்கின்ற திரைத்துறை என்பது ஒரு பொழுப்போக்கு சாதனம் என்பதையும் மீறி மானுட சமுதாயத்தின் உணர்ச்சி வெளிப்பாடு ஆகவும் மக்களுக்கு அறிவு புகட்டும் பாடமாகவும்அமைந்திருக்கிறது என்று கூறினால் அது மிகையில்லை.அதே நேரத்தில் திரையின் மூலம் தீமை செய்கிற செய்திகளும் உண்டுதான். அத்திரை மக்களும் மக்களுக்கான ஆட்சியும் கடிந்தொழித்தலும் கட்டாய மாகிறது.

அந்த வகையில் நமது தமிழ்த்திரையுலகின் திருப்பதையும் வளத்தையும், சீர்மையயும், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்றோர் மேம்படுத்தியிருப்பது கண்கூடு.


அங்ஙனம் 'தமிழ்த்திரை மலரும் நினைவுகள் தொகுதி -2' என்னும் இந்த நூலில் திறமையாளர்களின் தொழில்நுட்பங்களைத் தமது செழுமையான நடையில் திரு.வரிசை கி.ராமச்சந்திரன் அவர்கள் விளக்கியுள்ளார்கள். அவர் திரையுலகில் விரைவில் சிறந்த இயக்குநராக விளங்க இருப்பவர். அவரால் எழுதப் பெற்ற இந்த நூல் எல்லோராலும் விரும்பிப் படிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இதை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமையயும் கொள்கிறோம்.


- பதிப்பகத்தார்

Friday, January 25, 2008

தமிழ்த்திரை மலரும் நினைவுகள் தொகுதி 1


தமிழ்த் திரைப்பட வரலாறு மிகவும் சுவாரசியமானது. நட்சத்திரங்களும் திரையுலகம் தொடர்பான தொழில்நுட்பக் கலைஞர்களும் நம் பாராட்டுக்கு உரியவர்கள். அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் அவர்களைப் பற்றி வரும் செய்திகள் விரும்பிப் படிக்கப்படுகின்றன. சில சமயங்களில் விவாதிப்கப்படுகின்றன.

திரையுலகப் பிரமுகர்கள் பற்றிய செய்திகள் தொகுக்கப்பட்டுத் தரப்படும்பொழுது அதில் ஒரு முழுமை இருக்கிறது. மேலும் நடிப்புப் பயிற்சிக்கெனத் தனிக்கல்வி நிலையங்ளும் தோன்றிவிட்ட இந்தக் காலத்தில் திரைத்துறையினர் பற்றிய வாழ்க்கைக்குறிப்புகள் வாசகர்களுக்கும் அந்தத் துறையில் நுழைய விரும்புவர்களுக்கும் பெருமளவு உதவியாக இருக்கும். அந்த வகையைச் சேர்ந்தது வரிசை கி. ராமச்சந்திரன் அவர்கள் எழுதியுள்ள 'தமிழ்த்திரை மலரும் நினைவுகள் ' என்ற இந்த நூல்.

இதன் முதல் பாகத்தில் இடம் பெறுபவர்கள் திருவாளர்கள் கலைஞர் மு.கருணாநிதி, சீர்காழி கோவிந்தராஜன், சிவாஜி கணேசன், டி.எம்.சௌந்தராஜன், கலைஞானம், தூயவன் மற்றும் கமல்ஹாசன்.

இவர்களது கலை உலகப் பணி மற்றும் சொந்த வாழ்க்கை பற்றி நாம் அனைவரும் ஓரளவுக்கு அறிவோம் என்றாலும் இங்கே நூலாசிரியர் குறிப்பிடும் சில நிகழ்ச்சிகள் பலருக்கு புதியவை என்றே சொல்ல வேண்டும்.
திரைத்துறையில் பணிபுரிபவர்கள் மட்டுமே அறிந்துள்ள தகவல்கள் இங்கே எல்லா வாசகர்களுக்கும் கிடைக்கின்றன.

பல தகவல்கள் திரைத்துறை பற்றி ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். நூலின் நடை மிகவும் எளிமையாக இருக்கிறது.

சம்பவங்கள் சுவாரசியமானவை. ஒரே மூச்சில் படித்துவிடலாம். மீண்டும் படிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டும் நூல் இது.

தமிழ்த்திரை உலகம் பற்றிய வரலாற்று நூல்கள் எழுத விரும்புபபவர்களுக்கு பயனுள்ள புத்தகம் என்ற வகையில் இது பாராட்டுக்குறியது. பாராட்டுகிறேன்.


- கலைமாமணி நல்லி குப்புசாமி.