Tuesday, January 29, 2008

தமிழ் திரை மலரும் நினைவுகள் - தொகுதி 2


செல்லுலாயிட் ஊடகம் என்னும் சினிமாத் துறை அது தொடங்கிய காலத்திலிருந்து படிப்படியாகப் வளர்ந்து இன்றைக்கு டிஜிட்டல் சினிமாவாக பரிணமித்துள்ளது.

சினிமா என்கின்ற திரைத்துறை என்பது ஒரு பொழுப்போக்கு சாதனம் என்பதையும் மீறி மானுட சமுதாயத்தின் உணர்ச்சி வெளிப்பாடு ஆகவும் மக்களுக்கு அறிவு புகட்டும் பாடமாகவும்அமைந்திருக்கிறது என்று கூறினால் அது மிகையில்லை.அதே நேரத்தில் திரையின் மூலம் தீமை செய்கிற செய்திகளும் உண்டுதான். அத்திரை மக்களும் மக்களுக்கான ஆட்சியும் கடிந்தொழித்தலும் கட்டாய மாகிறது.

அந்த வகையில் நமது தமிழ்த்திரையுலகின் திருப்பதையும் வளத்தையும், சீர்மையயும், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்றோர் மேம்படுத்தியிருப்பது கண்கூடு.


அங்ஙனம் 'தமிழ்த்திரை மலரும் நினைவுகள் தொகுதி -2' என்னும் இந்த நூலில் திறமையாளர்களின் தொழில்நுட்பங்களைத் தமது செழுமையான நடையில் திரு.வரிசை கி.ராமச்சந்திரன் அவர்கள் விளக்கியுள்ளார்கள். அவர் திரையுலகில் விரைவில் சிறந்த இயக்குநராக விளங்க இருப்பவர். அவரால் எழுதப் பெற்ற இந்த நூல் எல்லோராலும் விரும்பிப் படிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இதை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமையயும் கொள்கிறோம்.


- பதிப்பகத்தார்

No comments: