Saturday, February 2, 2008

சுடர் வீசும் திரை நட்சித்திரங்கள்


தமிழ்த் திரையுலகில் பிரகாசித்த பதினான்கு திரைப்பட நட்சத்திரங்களின் திறனாய்வு என்று இந்தப் புத்தகத்தைப் பெருமையோடு கூறலாம். நண்பர் வரிசை.கி.இராமசந்திரன் திரைப்படத் துறையில் இணை இயக்குநாரக இருந்துகொண்டே திரைப்படத் துறை பற்றி இவர் எழுதும் பத்தாவது நூல் என்று நினைக்கும்போது இவரின் உழைப்பை எப்படிப் புகழ்வது என்றே தெரியவில்லை.
அமரர் திரு.சிவாஜிகணேசனின் முதல் பட நாயகி திருமதி. பண்டரிபாயின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடம். அமரர் திரு. எம்.ஜி.ஆரின் 18 திரைப்படங்களுக்கு துணை இணை இயக்குநராகப் பணியாற்றியவர்தான் இடிச்சப்புலி செல்வராஜ் என்ற செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுபோன்று திரு.கே.ஆர். இராமசாமி, திருமதி. அஞ்சலி தேவி, திரு.ஏ.கே.வீராசாமி, திரு.சித்தூர் வி.நாகையா, திருமதி .பத்மினி, திரு.எஸ்.வி.ரங்கராவ், திருமதி. பி. சரோஜாதேவி, திரு.கே.ஏ.தங்கவேலு, திரு. ரவிசந்திரன், கடைசியாக திரு.பிரபு என்று அனைத்து நடிகர்கள், நடிகைகள் பட்ட வேதனை சோதனை மற்றும் படப்பட்டியல் என்று தெளிவாக விவரிக்கிறது இப்புத்தகம். திரைப்பட நூல்கள் எழுதி சாதனை புரிந்தது போல இனிய நண்பர் வரிசை.கி.இராமசந்திரன் விரைவில் திரைப்படத்தை இயக்கி வெற்றியடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறோம்.
- சதிஸ்குமார்,
ஸ்டார் பிலிம் இன்ஸ்டிடீயூட்.

No comments: