தமிழ்த்திரை உலகில் ஜொலித்த திரைப்பட இயக்குநர்களின் திறனாய்வு என்று இப்புத்தகத்தைக் கூறலாம். இது, முதல் பகுதியைத் தொடர்ந்து வந்துள்ள இரண்டாம் பாகப் புத்தகம் ஆகும். இப்புத்தகம் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி எல்லாத் தரப்பினரையும் கவரும் வண்ணம் அமைந்திருப்பது இதன் கூடுதல் சிறப்பு.
உலக கலைகளிலேயே இன்று தலைசிறந்து விளங்குவது,திரை அரங்கில் திரையில் தோன்றும் கலையே.
இயல், இசை , நாடக்கலையே திரைக்கலைக்கு ஞானத் தாய் கலையாகும். இன்று திரைக்கலை விஞ்ஞான யுக்தியால் பலமடங்கு வளர்ச்சி பெற்று வானத்தின் நட்சத்திரததோடு மோதபார்க்கிறது.
இதற்கெல்லாம் மேலே உள்ள சினிமா மேதை தாமஸ் ஆல்வா எடிசன் என்ற சூரியனை நாம் நினைவில் கொள்ளாமல் இருக்க முடியாது.
இந்நூலின் ஆசிரியர் வரிசை.கி.ராமச்சந்திரன் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராக இருந்துகொண்டே எவ்வளவு சிரமப்பட்டு பழைய கால தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் தெளிவான வரலாறைச் சேகரித்திருப்பார் என்று நூலைப் படித்துப் பார்த்தாலே புரிகிறது.
நடராஜன் முதலியார் முதல் , புட்டன்னா , பீம்சிங் என்று இயக்குநர்களின் வரலாறு வலம் வருகிறது. அவர்கள்பட்ட வேதனை - சோதனை, அதன்பின் வெற்றி என்று புகைப் படங்களோடு எழுதி இருக்கிறார். திரையுலகில் இருந்தவரும் - இருப்பவரும் - இனி இருக்கப் போகிறவரும் இந்நூலைப் படிக்க வேண்டும். ஏனென்றால் திரையுலகில் இருப்பவர்களுக்கே பழைய கால இயக்குநர்களைப் பற்றித் தெரியாத விசயங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
எனவே இவரின் இந்தப் பணியை மனதாரப் பாராட்டுவதோடு மேலும் இது போன்ற நூல்களை எழுதும்படியும் , கூடிய விரைவில் திரைப் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி அடையவும் நெஞ்சார வாழ்த்துகிறேன்.
- எஸ்.ஜே.சூர்யா
No comments:
Post a Comment