Friday, January 25, 2008

தமிழ்த்திரை மலரும் நினைவுகள் தொகுதி 1


தமிழ்த் திரைப்பட வரலாறு மிகவும் சுவாரசியமானது. நட்சத்திரங்களும் திரையுலகம் தொடர்பான தொழில்நுட்பக் கலைஞர்களும் நம் பாராட்டுக்கு உரியவர்கள். அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் அவர்களைப் பற்றி வரும் செய்திகள் விரும்பிப் படிக்கப்படுகின்றன. சில சமயங்களில் விவாதிப்கப்படுகின்றன.

திரையுலகப் பிரமுகர்கள் பற்றிய செய்திகள் தொகுக்கப்பட்டுத் தரப்படும்பொழுது அதில் ஒரு முழுமை இருக்கிறது. மேலும் நடிப்புப் பயிற்சிக்கெனத் தனிக்கல்வி நிலையங்ளும் தோன்றிவிட்ட இந்தக் காலத்தில் திரைத்துறையினர் பற்றிய வாழ்க்கைக்குறிப்புகள் வாசகர்களுக்கும் அந்தத் துறையில் நுழைய விரும்புவர்களுக்கும் பெருமளவு உதவியாக இருக்கும். அந்த வகையைச் சேர்ந்தது வரிசை கி. ராமச்சந்திரன் அவர்கள் எழுதியுள்ள 'தமிழ்த்திரை மலரும் நினைவுகள் ' என்ற இந்த நூல்.

இதன் முதல் பாகத்தில் இடம் பெறுபவர்கள் திருவாளர்கள் கலைஞர் மு.கருணாநிதி, சீர்காழி கோவிந்தராஜன், சிவாஜி கணேசன், டி.எம்.சௌந்தராஜன், கலைஞானம், தூயவன் மற்றும் கமல்ஹாசன்.

இவர்களது கலை உலகப் பணி மற்றும் சொந்த வாழ்க்கை பற்றி நாம் அனைவரும் ஓரளவுக்கு அறிவோம் என்றாலும் இங்கே நூலாசிரியர் குறிப்பிடும் சில நிகழ்ச்சிகள் பலருக்கு புதியவை என்றே சொல்ல வேண்டும்.
திரைத்துறையில் பணிபுரிபவர்கள் மட்டுமே அறிந்துள்ள தகவல்கள் இங்கே எல்லா வாசகர்களுக்கும் கிடைக்கின்றன.

பல தகவல்கள் திரைத்துறை பற்றி ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். நூலின் நடை மிகவும் எளிமையாக இருக்கிறது.

சம்பவங்கள் சுவாரசியமானவை. ஒரே மூச்சில் படித்துவிடலாம். மீண்டும் படிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டும் நூல் இது.

தமிழ்த்திரை உலகம் பற்றிய வரலாற்று நூல்கள் எழுத விரும்புபபவர்களுக்கு பயனுள்ள புத்தகம் என்ற வகையில் இது பாராட்டுக்குறியது. பாராட்டுகிறேன்.


- கலைமாமணி நல்லி குப்புசாமி.



No comments: